பிறை நிலவே
நீ பிழை
நிலவா
இல்லை ஒளி
நிலவா
தினம் தேய்கின்றாய்
பின் வளர்கின்றாய்
ஏனோ இதை
நீ
தொடர்கின்றாய்
காரிருள்
சூழ வருகை
தந்தாய்
தினம் இன்பக்
காட்சி நீயே
காணத்தந்தாய்
பிறையே
!
பெண்ணென உன்னை
புகழச்
செய்தாய்
பெண்ணாக
நீ
இருந்தால்
நாணம் விட்டு
நடு இரவில்
யாரைத்
தேடி
அலைகின்றாய்
மாதம் ஒருமுறை
எங்கே
தொலைகின்றாய்
காலங்காலமாய் இருக்கின்றாய்
தலை நரைக்காமல்
இன்றும்
சிரிக்கின்றாய்
வயது முதிர்ந்த
கிழவியே
நீ தான்
எங்கள்
குமரியே
nice kavithai
ReplyDelete